Breaking

Tuesday 20 July 2021

தமிழகத்தில் முத்தரையர் மக்களின் தொகை

 தமிழகத்தில் முத்தரையர் மக்களின் தொகை


தமிழகத்தில் முத்தரையர் மக்களின் தொகை தோரயமாக,

தமிழகத்தில் வரலாறு மற்றும் சாதி பின்புலத்தில் வேறுபட்ட பல்வேறு இனக்குழு மக்கள் வாழ்கின்றனர். அவர்களுள் முதன்மை பெரும்பான்மை சமுதாயமாக முத்தரையர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய மாவட்டம் வாரியாக ஒவ்வொரு பகுதியிலும் முத்தரையர் அரசமரபை சார்ந்த வம்சாவளி மக்கள் பல்வேறு சாதி அடையாளத்தில் குறிப்பிடப்பட்டு பெருவாரியான மக்கள் தொகையில் வாழ்கிறார்கள்.

முத்தரையர் அரசாட்சி பரவியிருந்த டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மிக அடர்த்தியான மக்கள் தொகையையும், மற்ற பகுதிகளில் கணிசமாகவும் வாழ்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி மக்கள் தொகையில் முத்தரையர் சமுதாயம் வாழ்வதும், உண்மையான சாதி வாரி புள்ளிவிவரங்கள் மூலமாக அறியமுடியும்.... வாக்காளர் அடிப்படையில் சுமார் 1 கோடி மக்கள் தொகைக்கு அதிகமாக முத்தரையர் சமுதாயம் குறிப்பிடப்படுகிறது.

மாவட்டம் வாரியாக
முத்தரையர் மக்கள் தொகை :
        தமிழ்நாடு முழுவதும் அம்பலக்காரர், சேர்வை, முத்துராஜா, வலையர், முத்தரையர், முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர் என்று வாழும் முத்தரையர் வம்சாவளியினர் அடிப்படையிலும், சாதி சான்றிதழ் அடிப்படையிலும் முத்தரையர் சமுதாயம் மக்கள் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.

திருச்சி-70%

புதுக்கோட்டை-70%

சிவகங்கை-60%

தஞ்சை-60%

திண்டுக்கல்-55%

பெரம்பலூர்-55%

அரியலூர்-30%

கரூர்-60%

மதுரை-60%

விருதுநகர்-45%

இராமநாதபுரம்-40%

தூத்துக்குடி-25%

சென்னை-25%

காஞ்சிபுரம்-30%

வேலூர்-40%

நாமக்கல்-30%

கோவை-38%

தேனி-25%

திருவள்ளுர்-22%

திருவாரூர்-52%

நாகப்பட்டினம்-35%

புதுச்சேரி-35%

திருநெல்வேலி-25%

திருப்பூர்-35%

ஈரோடு-35%

விழுப்புரம்-30%

திருவண்ணாமலை-30%

சேலம் 30%.

மற்ற மாவட்டங்களில் முத்தரையர்கள் 10% குறையாமல் மக்கள் தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பு முத்தரையர் சமுதாயத்தில் இருந்து தனித்து வாழும் வேட்டுவர், ஊராளி கவுண்டர் மக்களை தவிர்த்து எடுக்கப்பட்டவை ஆகும்..
( இப்பிரிவுகளையும் சேர்த்தால் கொங்கு மண்டலம் மற்றும் சில மாவட்டங்களில் 5% - 15% வரை கூடுதலாக மக்கள்தொகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ).

Mutharaiyar

முத்தரையர் கோரிக்கை :
   தமிழக மக்கள் தொகையில் பெரும்பான்மை சமுதாயமாக வாழும் முத்தரையர்களுக்கு பொருளாதாரம் அடிப்படையிலும், அரசியல் பிரதிநிதித்துவம் அடிப்படையிலும் தனி ஒதுக்கீடுகள் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

அரசமரபாக போற்றப்பட்ட முத்தரையர் மக்கள் பொருளாதாரம், கல்வியில் நலிவுற்ற நிலையில் உள்ளனர். ஆகையால் மக்கள்தொகை அடிப்படையில் முதுஅரசகுடி மக்களுக்கு தனி உள்இட ஒதிக்கீடு அமைத்தல் சிறந்தது.

✓தமிழக முத்தரையர்களுக்கு பிற்பட்ட பட்டியலிலே 20% தனி இடஒதிக்கீடு வேண்டும்.

✓ முத்தரையர் மக்களுக்கு பெரும்பான்மை அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

இந்திய திருநாட்டின் மத்திய, மாநில அரசுகள் முத்தரையர் மக்களின் வாழ்வுரிமை கோரிக்கைகளை நிரைவேற்றிட முயற்சிக்க வேண்டும்..🙏

சிங்கத்தமிழரின் ஒருமித்த கோரிக்கை வெல்லட்டும்...!
வாழ்த்துக்கள்..!


1 comment: