Tuesday, 20 July 2021

கண்ணப்ப நாயனார் ஐராவதேஸ்வரர் கோயில்

 கண்ணப்ப நாயனார் ஐராவதேஸ்வரர் கோயில் 

தானத்தில் சிறந்தது கண் தானம் என்பதை முன்கூட்டியே உலகிற்கு எடுத்துரைத்தவர் கண்ணப்ப நாயனார். ஐராவதேஸ்வரர் கோயில்  மகாமண்டபத்தின் நுழைவாயிலில் எங்கும் காணக்கிடைக்காத கண்ணப்ப நாயனாரின் பெரிய சிற்பம் இருக்கிறது. வில்லுடன் கைக்கூப்பிய நிலையில் உள்ள இவரது இந்த சிற்பம் அற்புதமானது. இவர் காலில் மெல்லிய காலணியுடன் காட்சியளிக்கிறார். காட்டில் வாழ்வதால் அதற்கேட்ற்ப மரபலகையினால் செய்யப்பட்ட காலணியை அணிந்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கூர்ந்த மதி காரணமாக கண்ணப்ப நாயனாரின் காலணியும் இங்கு கவிதை பேசுவதாக உள்ளது.




No comments:

Post a Comment