Breaking

Showing posts with label Mutharaiyar History. Show all posts
Showing posts with label Mutharaiyar History. Show all posts

Tuesday 20 July 2021

July 20, 2021

பாரிவேட்டை திருவிழா

 பாரிவேட்டை திருவிழா


பாரி வேட்டை திருவிழா!

முத்தரையர் சமுகத்தின் அரசவேட்டையையும்,மன்னர் பாரியின் வழிதோன்றல்கள்,கண்ணபர் வம்சவழியில் வந்த நம் முத்தரையர் குல பாரிவேட்டையை நேற்றைய தினம் சிறப்பாக கொண்டாடினர்.மதுரை கல்லுப்படி சுற்று பகுதியில் நேற்றைய தினம் குலதெய்வ கோவிகளில் பாரி வேட்டை திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர்.இதில் அசைவம் படைத்து வழிபாடு செய்யனர்.மேலும் ஆடி 18ம்  தேதி மறுநாள் பறம்புநாடு பொன்னமராவதி பகுதிகளில் பாரி வேட்டை நடைபெறும்...



Tuesday 8 December 2020

December 08, 2020

ஊர் அம்பலம் பட்டம் சூட்டும் விழா

 ஊர் அம்பலம் பட்டம் சூட்டும் விழா






முத்தரையர் சமுகத்தில் மட்டுமே உள்ள நாடு,அம்பலம்,மிராஸ் முறை அரசாட்சி!
ஊர் அம்பலம் பட்டம் சூட்டும் விழா!!!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் ஒன்றியம்
முத்தரையர் நாட்டின் பதினைட்டுபட்டி,
பனையப்பட்டி ஏழூர் நாட்டின் முறைப்படி இன்று வைரம்பட்டி கிராம
"ஊர் அம்பலகாரர்"பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது.வைரம்பட்டி அம்பலகாரராக 
திரு.ஆறுமுகம் அவர்களுக்கு ஊர் அம்பலகாரர் பட்டம் சூட்டப்பட்டது.
மேலும் வைரம்பட்டி ஊர் தண்டல்காரர் பட்டம் 
திரு.வைரவன் அவர்களுக்கு சூட்டப்பட்டது.இதில் ஏழூர் நாட்டின் தலைமை ஊரான பனையப்பட்டி ஊர் அம்பலகாரர் மிராஸ் முரு.அழகப்பன் அம்பலகாரர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முத்தரையர் சமுகத்தில் மட்டுமே உள்ள கிராம,நாடு அரசாட்சி முறை.நெடுங்கால வரலாற்று முறைப்படி இன்றளவும் வாழ்வது முத்தரையர் மூத்தகுடி சமுகம் மட்டுமே...

பட உதவி-அ.கருப்பையா அம்பலம்

பதிவு:
      ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
      முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்


Wednesday 18 November 2020

November 18, 2020

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-2

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-2


முத்தரையர் மன்னர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக நீர் மேலாண்மையை உருவாக்கியும்,பராமரித்தும் வருகின்றனர்.ஏராலமான முறைகளில் முத்தரையர்கள் நீர் மேலாண்மையை வளர்த்துள்ளனர்.

அதில் ஒன்றுதான் ஏரி,பெரும்கம்மாய்களில் அமைத்துள்ள குமிழித்தூம்புகள்...

குமிழி:

       இந்த குமிழித்தூம்புகள் மடை பகுதிக்கு முன்னதாகவும்,சில ஏரிகளில் மையப்பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

இருபுறம் தூண்களும் நடுவில் கம்பி மூலம் மதகு அடைக்கப்பட்டு இருக்கும்.

நீர் விவசாயத்துக்கு தேவைப்படும் போது அந்த கம்பிகளை மேலே தூக்கி மதகு திறக்கப்பட்டு நீரானது விவசாய நிலத்துக்கு பாய்ச்சப்படும்.அந்த நேரத்தில் மதகுக்கு கீழ்புறம் உள்ள சேறோடித்துளைகள் வழியில் சேற்கள் தேக்கி வைக்கப்படும்.நீர் மட்டுமே விவசாய நிலத்துக்கு செல்லும் வகையாக இந்த குமிழித்தூம்புகள் அமைக்கப்படும்.இவ்வாறு முத்தரையர்கள் சிறந்த நீர் மேலாண்மையை உருவாக்கி மக்களுக்கு பயன்படும் வகையில் பல குமிழித்தூம்புகளை அமைத்து நாட்டை செலிப்பாக ஆட்சி செய்துள்ளனர்.


முத்தரையர் மன்னர்கள் பல குமிழித்தூம்புகளை அமைத்துள்ளனர்.அதில் முதலாவதாக நாம் பதிவு செய்த குமிழித்தூம்பு புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், வேகுப்பட்டி
பெருவளஞ்சான் கண்மாயின் தெற்கு 
மடை ஆகும்.இந்த கம்மாயில் இரண்டு இடங்களில் குமிழித்தூம்புகளை அமைத்துள்ளனர்...
குமிழித்தூம்பு கல்வெட்டு செய்தி:
           ஸ்வ ஸ்தி ஸ்ரீ யாண்டு மு
           ப்பத்தஞ்சாவது
           இவ்வாண்டு இக்கு
           ளத்தில் குமிழியு
           ம் கற்காலும் மின்
           டகமும் கடையங்
           கிணறும் செய்வித்
           தான் அண்டங் கா
           னப்பேராயின அரி
          குலகேசரி முத்தரை
          யனேன்.
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில்
"அண்டங் கானப்பேராயின அரிகுலகேசரி முத்தரையன்" என்ற முத்தரையர் மன்னர் இந்த பெருவளஞ்சான் கம்மாயில் குமிழித்தூம்புகள் மடை 
செய்ததைத் தெரிவிக்கிறது.இவ்வாறு நீர் மேலாண்மையை வளர்த்து 
முத்தரையர் மன்னர்கள் முத்தரையர் நாட்டை செலிப்போடு ஆட்சி செய்துள்ளனர்...

நன்றி

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவுகள் தொடரும்...

முத்தரையர் சமுக வரலாறு பணியில்,
    ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
    முத்தரையர்  வரலாறு ஆய்வுக்கூடம்



November 18, 2020

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-1

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-1


முத்தரையர்கள் தமிழ் நிலத்தின் ஆதிகுடிமக்கள்.சங்க இலக்கியம் கூறும் மூத்தகுடி மக்கள்.இவர்கள் கடல்,நிலம்,மலை,காடு என அனைத்து பகுதியிலும் வாழக்கூடிய மக்கள்.எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அந்த இடத்தில் வாழ்வுக்கு ஏற்றவைகளை உருவாக்கி வாழ்ந்தவர்கள் முத்தரையர் சமுக மக்கள்.குறிப்பாக ஆதியில் வேட்டையாடுதல்,மீன் பிடித்தல்,முத்து எடுத்தல்,கடல் வணிகம், நெல் விவசாயம்,காய்கறிகள் விளைவித்து வணிகம் செய்தல்,பழங்கள் விளைவித்தல் போன்று இடத்திற்க்கு ஏற்ப வாழ்ந்தவர்கள் முத்தரையர் சமுக மக்கள்.இதில் விவசாயத்திற்க்கு பெரும்பங்கு நீர் மட்டுமே மூலகாரணமாகும்.ஆகையால் நீர் மேலாண்மைக்கு சிறந்த பல பணிகளை புதிதாக உருவாக்கியவர்கள் முத்தரையர்கள்.அதன் வரலாறுகள் தமிழகத்தின் நீர் மேலாண்மைக்கு முக்கியம் வாய்ந்தவை.

திருக்குறள்;
நீர்இன்று அமையாது உலகெனின்யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
திருவள்ளுவர் கூற்றுக்கு ஏற்ப வாழ்பவர்கள் முத்தரையர்கள்.

முத்தரையர்கள் வளர்ந்த நீர் மேலாண்மை:
                      முத்தரையர்கள் நீர் மேலாண்மைக்கு முதன்மையாக கூற வேண்டும் என்றால் அது நம் 
கரிகால் வளவன் காவேரி அன்னையின் மேல் எழுப்பிய கல்லனையைதான் நாம் முதலில் கூறவேண்டும்.கல்லனை தமிழ் இனத்தின் பெரும் அடையாளம்.
டெல்டா மண்டலத்தின் விவசாயத்தை தீர்மானிக்கும் அணையாக இன்றுவரை உள்ளது.(விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்)

முத்தரையர்கள் நீர் மேலாண்மையை வளர்த்த வகைகள்:
                   *கல்லனை
                   *ஏரி
                   *மதகு,குமிழி
                   *கிணறு
                   *அகழி
                   *கண்மாய்
                   *ஊரணி
                   *குளம்,குட்டை 
 பல ஆயிரம் ஆண்டுகளாக நீர் மேலாண்மையை அமைத்தும் அதை பாதுகாத்தும்,பராமரித்தும்,மக்கள் பயன்பாட்டிற்க்கு அமைத்து 
நீர் மேலாண்மைக்கு சிறந்தவர்களாக முத்தரையர் பெருங்குடி விளங்குகிறது.

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை பற்றிய வரலாறு செய்திகளை அடுத்தடுத்த பதிவுகளாக விரிவாக பதிவு செய்வோம்...
மேலும் உங்கள் பகுதியில் உள்ள முக்கியம் வாய்ந்த நீர் மேலாண்மைக்கு சிறந்த விளங்க கூடிய ஏரி,கண்மாய்கள் போன்றவைகள் இருந்தால் தெரிவியுங்கள்..

நன்றி...

சமுக வரலாறு பணியில்,
  ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
  முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்


b>

Tuesday 10 November 2020

November 10, 2020

வளரிக்கோர் வலையர்

 வளரிக்கோர் வலையர்


வலையக்காரர் என்பதும் முத்தரையர் இனத்துள் ஒன்று .போரில் வளை வலை எரிதலும்,அதனால் படைகள் முன்னேறி வெற்றி   பெறுதலும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. வலை எறிதலில் தேர்ச்சி பெற்றவர்களே எய்ய முனைவர். முத்தரையர் இனத்தில் வலை எறிந்து சிறப்பு பெற்றதால் வளையக்காரர் எனச் சிறப்பிக்கப் பெற்றனர் .ஆதலால் இது தொழிலால் வந்த பெயர் . பெருமை கொள் முத்தரையர்களே.

வல்லயம் எறிதல் படைக்கலாம் எறிதலில் ஒன்றாகும், வல்லயம் என்பது ஒரு படைக்கருவி.அத்தொழில் புரிந்தோர் வல்லயர் எண்ணப்பட்டு நாளடைவில் வலையர் எனச் சிதைந்து வழங்கலாயினர். இதுவும் தொழிலால் அமைந்த பெயரே.

கோவை மாவட்டத்தில் வலையர் குடும்பங்கள் ராணுவத்தொடர்புடைய குடும்பம் என கருதியே அவர்களை காவல் நிலையம் போன்ற கண்காணிப்பு நிலையங்களில் வந்து தங்கச் செய்ததோடு அவர்கள் வசம் இருந்துவந்த வல்லயம் என்ற போர்கருவிகளையும் பறிமுதல் செய்துள்ள செய்தியை அங்கு வாழ் வலையர் குடும்பங்களை கேட்டு அறியலாம்.

வலையர்களின் உட்கிளைகள்

கருப்பாசி வலையர்கள்

வன்னிய வலையர்கள்

செம்பாசி வலையர்கள்

சருகு வலையர்கள்

செட்டிநாடு வலையர்கள்

ஆயா வலையர்கள்

மூக்குத்தி போடாத வலையர்கள்

உட்கிளைகள் அடங்கிய பகுதிகள்

எட்டரை கோப்பு நாடு,

தானம நாடு

வழுவாடி நாடு

ஏழூர்ப்பத்து நாடு

நடு நாடு (அ) அசல் நாடு

குரும்ப நாடு

வன்னிய நாடு

அம்பு நாடு

புனல் நாடு

வேடன் நாடு

சுளுந்துக்காரன் நாடு

அம்பலகாரன் நாடு

வெள்ளாம்புட்டு நாடு

கறடி  நாடு

கங்கு நாடு

பாசிக்கட்டி நாடு

காரைக்காட்டி நாடு

மேலே கூறிய நாடுகள் பரவியுள்ள இன்றைய மாவட்டங்கள்.

சிவகங்கை

ராமநாதபுரம்

மதுரை

தஞ்சாவூர்

திருச்சி (புதுக்கோட்டை)

திருநெல்வேலி

கோவை

வட ஆற்காடு

நீலகிரி மாவட்டங்கள்

நன்றிஅண்ணன் பழ.சங்கிலித்தேவன்பழுவேட்டரையர்


நாம் முத்தரையர் குலவலையர் என்பதில் பெருமை கொள்வோம்


பதிவு.

முத்தரையர் வர்மன் இளங்காடு


justify;">

Saturday 3 October 2020

October 03, 2020

பெருமைமிக்க முத்தரையர் மாநாடுகள்

 பெருமைமிக்க முத்தரையர் மாநாடுகள்

 1.முத்தரையர் மாநாடு நாள்:-10-4-1908

இடம்-உறையூர்

மதிப்பிற்குரிய அன்னிபெசன்ட் அம்மையார் கலந்து கொண்ட வரலாற்று சிறுப்பு மிக்க மாநாடு...


2.முத்தரையர் மாநாடு நாள்:27-06-1926

இடம்-பூனாம்பாளைம்

இந்த மாநட்டில் அப்போதைய சென்னை சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆர்.சேதுரத்தினம் ஐயர் கலந்து சிறப்புரை நிகழ்த்தினார்...


3.முத்தரையர் மாநாடு நாள்:10-08-1929

இடம் -திருவரங்கம்

முதலமைச்சர் கனம் டாக்டர்.பி.சுப்பராயன் ரெட்டியார் அவர்கள் கலந்து கொண்டார்...


4.முத்தரையர் மாநாடு  நாள்:28-12-1947

இடம் -புரசவாக்கம்,சென்னை 

முதலமைச்சர் பக்தவச்சலம் முதலியார் B.A.B.L கலந்து கொண்டார்...


5.முத்தரையர் மாநாடு நாள் :12-08-1979

இடம்-புதுக்கோட்டை 

முதலமைச்சர் மாண்புமிகு M.G.இராமச்சந்திரன்  அவர்கள் கலந்து கொண்டார்...


6.முத்தரையர் மாநாடு நாள் : 7-2-1996

இடம்:திருச்சி

முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்டு பேரரசர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைத்தார்...


இந்த தகவல் (தமிழ்நாடு முத்தரையர் சமூகச் சங்க100 ஆண்டு வரலாறு) என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது...


மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மேற்கண்டவர்கள் நான்கு பேர் முதலமைச்சராக இருந்தவர்கள்  என்பது குறிப்பிட்டதக்கது ,

இது முத்தரையர் சமூகத்தின் பெருமை போற்றுகிறது...

தஞ்சையிசெய்கிறேன்...

Saturday 13 June 2020

June 13, 2020

பாண்டியராஜமுத்திரங்கம் / Mutharaiyar

பாண்டியராஜமுத்திரங்கம் 
படம் உதவி: மூர்த்தி வலையங்குளம்

HD PNG IMAGE DOWNLOAD LINK

மீனவர் கொடியின் 21 சின்னங்கள்
வலையன் மீனவனா வேட்டுவனா  பரப்பரப்பாக விவாதம்  நடைபெறுகிறது...

வலையர் வேட்டையாடுற குருப்பு ஒரு தரப்பு சொல்லுறாங்க காரனம் கண்ணப்பரை உரிமை கொண்டாடுறாங்க...அடுத்த குருப்பு மீனவர்தான் என்று இன்னுறொருத்தர்
மீனவ வலையர் வேற வேட்டுவ வலையர் வேற என்று இன்னொருத்தர்.
 மண்டை காய்ந்து நிக்கிறேன்...
என்னா சொல்லலாம்.... என்று

மீனவன் 21 சின்னம் வைத்து ஆண்டு உள்ளான் என்று சின்னம்மே சான்று
இப்ப இந்த சின்னத்தில்...
மீன் உண்டு  முத்தரையர்க்கு கயல் சேர் வேல் கொடியன் என்று பெயர் உண்டு
அப்ப மீன் கொடி வேல் கொடி முத்தரையர்க்கு உண்டு என்று தெளிவாகும்.பல கல்வெட்டு முத்தரையர் மீனவன் என்ற ஆதாரம் உண்டு.. நடமுறையில் மீன் பிடிக்கும் வலையர் உண்டு...
அடுத்து வலையன் தான் முத்தரையர் என்று பல கல்வெட்டு செப்பேடும் சான்று உண்டு.
மீனவன் அதிபத்த நாயனார்  சோழநாட்டை சேர்ந்தவரே தவிர பாண்டியநாடு அல்ல 
அப்ப சோழ நாட்டில் மீனவன் உண்டு 
என்று உறுதி செய்ய படுகிறது.
மீனவரில் சூரியன் சின்னம் உண்டு சூரிய குல முத்தரையர் உண்டு என்று தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்து சோழ நாட்டில் பிறந்தவர் 
கண்ணப்பர் ஆவார் பொத்தப்பி சோழ நாடாகும் வேட்டுவன்ஆவர் குகன் வேட்டுவன் என்றே குறிக்கபடுகிறான் சிவனும் வேட்டுவன்என்றே குறிக்க படுகிறான்.கேவேட்டுவன் வலையர் உண்டு. அகராதி சொல்லுது பல பாடல் உறுதி படுத்தபடுகிறது  அப்ப உள் நாட்டு மீனவன் நீர் வற்றிய போது வில் வலைஞன் காட்டில் வேட்டையாடதொடங்குகிறான்... அவனே தன்னை கண்ணப்ப வழி வலையன் என்று கூறிக்கொள்கின்றனர் கடல் அருகில் இருக்கும் பரதவவலையர்  கடலில் மற்றும் பிழைப்பை பார்க்கிறான் உள் நாட்டு மீனவன் மீன் மற்றும் வேட்டையாடுகிறான். தொழில் மறந்து வேட்டையாடுகிறான்....
அனைத்து வலையரும் சூரியனே தன் முன்னோன் என்றும்
 பரதவரில் பகல் பரதவன் சூரியனே...
வேட்டுவரில் வேட்டுவதிரையன்  சொல்லாடல் உண்டு...
ஆகையால் தான் வேட்டுவனுக்கும் மீனவனுக்கு மட்டும் முத்தரையர் பட்டம் உண்டு மாற்றான் யாருக்கும் இல்லை
குரு குலத்தில் மீனவனும் வேட்டுவனும் உண்டு என் எப்படி ஒரு இன குழு ஆகையாள்.
வலையன் பிரிவினை தேடும் அதிமேதாவிகள் வரலாற்றை படியுங்கள் 
இந்தியா முழுவதும் உள்ள மீனவ வேட்டுவன் வரலாறு படியுங்கள்.
தமிழ் நாட்டு வரலாறு படித்து மனதை சுருக்கி கொள்ளாதீர்கள்
இந்தாயா முழுவதும் அதையும் தாண்டி உண்டு தமிழர் வரலாறு 
தமிழை கற்றுக்கொண்டு பிழப்பு நடத்தும்  
மாற்று மொழியுண்டு....
மாற்று மொழியை கற்றுக்கொண்ட பிழைப்பு நடத்தும்  தமிழர்ரும் உண்டு
எதை விளம்ர படுத்திரையுங்களே அவைகளே முண்ணாடி....தெரியும் 
விளம்பர அதிமோதவிகளே...

புரான காலம் வலையன் குவலையசுவன் (துந்து மாறன்)
சங்க கால வலையன் கரிகால வளவன்
வலையன் வீட்டு பெண் கன்னகி 
வலஞ்சியன் ஐநூற்றவன் வனிகன்
சோழ நாடு...
சாரன வளரியன் போர் வீரன்
யானை கட்டி தீனி போட்ட இரும்பொறையன் வாழி(லி)யன்
பாண்டிய பேரரசு நிலைத்து நின்று காவல் அரன் வழுதியன்
எந்த பேரரசு துனை நின்றாலும் 
தன் இனம் தனி தெரிய வேண்டும் என்று
தனி நாடு இடை நாடு உடையோன் முத்தரையர் என்று வழக்கில் வாழ்வுடையோன் சுவறன் மாறன் கருவலையன்

இவண்.
வளவன்.வலைஞன்.வலைஞ்சியன்
வளரியன்.வழுதியன்.வாழி(லி)யன் 
இன்றைய வலையர் மூப்பர் மூப்பனார் முத்தரையர்

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network

Saturday 25 April 2020

April 25, 2020

தமிழரின் வரலாறில் தொன்மையான வளரி ஆயுதம்

*தமிழரின் வரலாறில் தொன்மையான  வளரி ஆயுதம்.*🤺





வீரமிக்க தமிழினத்தில் பெருமைக்குறிய ஓர் ஆயுதம்.. எட்டுத்திசையும் அளந்து வீசிய கைகளுக்கே திரும்ப வரும் வியப்பை,
இன்றும் நம்மனதில் நிலையாக ஏற்படுத்தும் பெருமைமிக்க தமிழரின் நுன்ஆறிவு திறமை போற்றும் பண்டைய ஆயுதம்.

இந்த வளரி முதன்முதலில் கொடிய மிருகங்களை தாக்கி மக்கள் நலன்காப்பதற்காக காவல்காரர்களாக- மீனவர்களாக- அரசர்களாக வாழ்ந்த மூத்தகுடி வலையர் மக்களால் 12 நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது.

வளரி ஆயுதத்தின் பழமை காலம் நாம் அறிந்த சில சான்றுகளின் படி *1200 வருடம் தொன்மையானது தமிழனின் வளரி*. அதற்கும் முந்தயதாகவும் இருக்கலாம். வரலாறு அழிந்துள்ளதால் அறிவுறுத்தி கூற இயலவில்லை வரலாற்று அறிஞர்களால்.

வளரி 12 நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதே தமிழரின் தனிச்சிறப்பை எடுத்துரைக்கிறது.

முத்தரையர் பேரரசு காலத்திலும், மாமன்னர் இராஜராஜ சோழன் காலத்தில் போர் கருவியாகவும் இந்த வளரி சிறந்ததாக கூறப்பட்டுள்ளது.

*வளரி பழமையை உணர்த்தும் ஒரே சான்று கி.பி. 11 நூற்றாண்டில் வாழ்ந்த வளரி வீசும் முத்தரையன் (எ) வீரமல்ல முத்தரையர் வரலாறு என்பதே ஆகும்.*

வீரமல்ல முத்தரையர் தமது முன்னோர்களின் வளரி கையாளும் திறமையை திறம்பட உலகிற்கு எடுத்துரைத்து வளரி வீரனாகவே வரலாற்றில் அழிய இடம்பிடித்துள்ளார்.🤺

*(சான்று : வேங்கையின் மைந்தன்.)*- வரலாற்று சரித்திர நாவல்.

அதன்பிறகு தொன்றுதொட்டு வந்த தமிழின வீரமிக்க ஆயுதங்கள் பல ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. 

*வளரி, வேல்கம்பு மற்றும் போர் ஆயுதங்களை கொண்ட காவல்காரர், ஊர்தலைமை சிற்றாட்சியர் முத்தரையர்களில் பெருமளவு மக்கள் அம்பலகாரர், சேர்வை, வலையர், வலையமார் மூப்பர் உட்பட பலர் உள்நாட்டிலே நிலங்கள் பறிக்கப்பட்டு அகதிகளாக மாற்றப்பட்டனர். சில கள்ளர் மறவர் மற்றும் சில இனங்களும் இதில் அடங்குவர்.*

வீரமிக்க தமிழ்மறவர்களாக  அனைவரும் ஆங்கிலேயனை எதிர்க்க எஞ்சியுள்ள சில வளரியை பாதுகாத்து பயன்படுத்தி தமிழர் இனமானம் காத்தனர்.

300 ஆண்டுகளுக்கு முன்பு வளரியை பயன்படுத்தி இன்றைய காலத்தில் நாம் அறிய வழிவகுத்தவர்கள் மருது சகோதரர்கள் என்ற வீரமிக்க படைத்தளபதிகள் ஆவர்.

வரலாற்று சிறப்புமிக்க வளரி எனும் வலையர்களின் வலைஎறி- வலைதடியை பாதுகாப்பது தமிழர்களின் கடமை. பாரம்பரிய வழிபாட்டில் சில வளரியை கண்டு நாம் கையிலேந்தி நிற்கும் தருணம் செருக்குடன் மகிழ்ச்சியை தருவதாகும்.

*வளரியின் மகத்துவம் அறிவோம்...!*
*12 நூற்றாண்டு தொன்மமிக்க வளரியை பாதுகாப்போம்...!*

*🔥மறைக்கப்பட்ட வரலாற்றை தமிழர்கள் வெளிக்காட்டுவோம்..*.🙏🙏

முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network

April 25, 2020

சிவகங்கை சீமை வரலாறு பகுதி-04

சிவகங்கை சீமை வரலாறு பகுதி-04


ஆங்கிலேயர் சிவகங்கை சீமையில் கைபற்றிய ஆயுதங்கள்...

சிவகங்கை சீமையை மருது சகோதர்கள் காத்துவந்துள்ளனர்.மேலும் புதுக்கோட்டை தொண்டைமான் செய்த துரோகத்தால் அவர்கள் வீர மரணம் அடைந்தனர்...அதை நம் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம்....அதை போல இப்பதிவில் மருது சகோதரர்கள் போருக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றியும் ஆங்கிலேயர் மருது பாண்டியர்களிடம் இருந்து கைபற்றிய ஆயுத அறிக்கைகளை பற்றி பார்ப்போம்.....

 சிவகங்கை சீமையில் வீரர்களுக்கும் ஆயுதங்களும் பஞ்சிமில்லை....

இதில்
16-1-1802ம் ஆண்டு தேசிய கணக்கிட்டின்படி

சிவகங்கை சீமையில்,
மஸ்கட்-1050 ஆயுதங்கள் மட்டும் கைபற்றியுள்ளனர்....

ஆனால் நெல்லை மற்றும் இராமநாதபுரம் சிமையில்,
மஸ்கட்,மஸ்ஸில்லோடிங் துப்பாகி,கைத்துப்பாக்கிகள்,வால்பீஸ்,பீரங்கி,
நீண்ட ஈட்டிகள் என நெல்லையில் மொத்தமாக
 5558ஆயுங்களும்,இராமநாதபுர சீமையில் 2992ஆயுங்களும் கைபற்றியுள்ளனர்....

(21-2-1802ஆம் ஆண்டு தேசிய அறிக்கை)
சிவகங்கை சீமை
மஸ்கட்-------------------1639
பிரங்கி-------------------0
மாட்சிலாக்-------------944
கைத்துப்பாக்கி------19
மஸ்கட்(மாட்சிலாக்லோட்)-8
சருகார்--------------------78
ஜிஞ்சாலி-----------------14
ஈட்டிகள்--------------------3275
ஈட்டி முனைகள்--------108
ஈட்டி தடி---------------------0
துப்பாக்கி சனியன்--91
கைத்துப்பாக்கி(குழாய்)-1
இவ்வாயுங்களை கைப்பற்றியுள்ளனர்...
அதை போல நெல்லை மற்றும் இராமநாதபுரம் சீமையில் கைப்பற்றியுள்ளனர்.....

31-3-1802தேசிய அறிக்கை(4-1-1801முதல் 31-3-1802)வரை
சிவகங்கை சீமை
துப்பாகியும்,குழாய்கள்-----2096
மாட்சிலாக்                      -----1229
வேல்,ஈட்டி                      -------3640
கைத்துப்பாகிகள்--------------42
வாள்----------------------------------652
குத்துவாள்------------------------441
ஜிஞ்கால்---------------------------17
ஸரோசர்-----------------------------90
துப்பாக்கி சனியன்------------91

சிவகங்கை சீமையில் இவ்வாயுதங்களையும்,நெல்லை மற்றும் இராமநாதபுர சிமையிலும் கைப்பற்றியுள்ளனர்........

மேலும் இச்செய்தி
Madurai district records vol.1178(A)(17-5-1802)p.354
Madurai district records vol.1139(16-1-1802)p.27
Madurai district records vol.1140(31-3-1802)p199
Ipai 1141(31-3-1802)p 25-53 குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை ,
நூல்-- மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர் டாக்டர் S.M.கமால் அவர்களின் நூலில் ப.எண்186 மற்றும் 187ல் குறிப்பிட்டுள்ளார்....

இதில் வளரி எங்கே?????
    
 சிவகங்கை சீமை என்றாலும் மருது பாண்டியர் என்றாலும் முதலில் குறிப்பிடும் ஆயுதமாக வளரியை கூறுகின்றனர்...வளரி பற்றி பலரும் கூறுவது அது ஒரு கொடிய ஆயுதம்,தலையை சீவி விடும்,அதன் சத்தம் கேட்டால் ஆங்கிலேயர்கள் பயந்து ஓடினர்..மருது பாண்டியர்கள் வளரி வீசுவதில் வல்லவர்கள் என்று பலரும் க வளரியை கூறுகின்றனர்..
அவ்வாறு ஆங்கிலேயரை அச்சுருத்திய வளரியை கண்டு ஆங்கிலேயன் பயந்திருந்தால் இப்பட்டியலில் வளரி இடம் பெற்றிறுக்க வேண்டும்தானே???? 
ஆனால் இடம் பெறவில்லை....இதை வைத்து பார்க்கும் போது வளரி என்ற ஆயுதம் ஆங்கிலேயரை அச்சுருத்தவில்லையா?????? அல்லது மருது பாண்டியர்கள் வளரியை பயன்படுத்தவில்லையா??????என்ற கேல்வி எழுகிறது.....

ஆனால் மருது பாண்டியர்கள் பயன்படுத்திய வளரி என்று கண்காட்சி பொருளாக வளரி இடம் பெற்றுள்ளது இது எப்படி என்பது ஒரு பக்கம்!!!!
வளரி பயன்படுத்தியவர்களிடம் மிஞ்சிபோய் ஒருசில வளரி இருக்கவேண்டும்????
 சிவகங்கை சீமை மற்றும் புதுக்கோட்டை சீமைகளில் வளரி இருக்கிறது...ஆனால் ஆதி குடியான வலையர் சமுகத்தினர் மக்களிடமே உள்ளது.வளரியின் தொன்மை இன்றும் வலையர்களிடமே காணமுடிகிறது...
வளரயின் நெருக்கதை வலையர் குடி மக்களிடமே காணலாம் குறிப்பாக மர வளரி மற்றும் இரும்பு வளரி இரு வகையிலும் வளரியை வலையர் மக்கள் மட்டும் வைத்துள்ளனர் என்பதில் மாற்றுகருத்தில்லை.....
ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆயுதங்கள் போக மீதம் இருந்த ஆயுதங்களை மீஸ்சியம் போன்ற இடங்களில் கண்காட்சி பொருளாக மாறிபோனது வீரர்களின் ஆயுதங்கள்...அவற்றில் ஒன்றாக வளரியும் உள்ளது அது இடத்திற்க்கு தகுந்தவாறு அப்பகுதியில் உள்ளவர்களின் பெயரினை குறிப்பிட்டு வைத்துள்ளனர் என்பதுதான் வேடிக்கையான ஒன்றாக உள்ளது.....
குறிப்பு மருது பாண்டியர் இருந்த பகுதியிலும் வலையர் குடிமக்களே வளரி இன்று வைத்துள்ளனர்....

நன்றி..

தொகுப்பு;
     ஏ.எஸ்.கலையரசன் சேர்வை
     பொன்னமராவதி

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network


April 25, 2020

சிவகங்கை சீமை பகுதி -03 வரலாறு

சிவகங்கை சீமை பகுதி -03 வரலாறு




மாவீரர் மருது பாண்டியர்கள் மறைவுக்கு விளைவித்த துரோகம்:
                  மருது பாண்டியர்கள் பல வழிகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர்.ஒரு கட்டத்தில் தொண்டைமான் சதி வேலை காரணமாக தன் படை பலம் என எல்லாவற்றையும் இழந்த நிலை ஏற்பட்டது...
அப்போதை நிலையில் மருது பாண்டியர்களை ஆங்கிலேயர்களிடமிருந்தும் தொண்டைமானிடம் இருந்தும் தப்பிக்க வைக்கவே மக்கள் முற்ப்பட்டனர்...
தொண்டைமான் பல வழிகளை பயன்படுத்தனார்..
மருது பாண்டியர்கள் அடர்த்தியான காட்டுக்கள் தஞ்சம் புகுந்தனர்...
சோழபுறத்திர்க்கும் ஒக்கூருக்கும் இடைபட்ட காட்டில் பெரியமருது தங்கியிருந்தார்...அதை ஆங்கிலேயரின் கைகூலி தொண்டைமான் கண்டுபிடித்தனர்.
பெரிய மருதுவிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லாத நிலையை கண்டவுடன் ஆங்கிலேயரின் கைகூலி (தொண்டைமான்)  பெரியமருதுவை கைது செய்தனர்...
அந்த காட்டுக்கு அருகே சின்ன மருதுவும் இந்ததையும் கண்டுபிடித்தனர்.ஆனால் சின்ன மருதுவை எளிமையாக சிறையிடமுடியாது என்று ஆங்கிலேயரும்,தொண்டைமானும் நன்கு அறிந்துள்ளனர்...ஆகையால் ஆங்கிலேயரின் கைகூலி அதாவது (தொண்டைமான்) தூரத்திலிருந்து சின்னமருதுவை துப்பாகியால் சுட்டனர் அதன் பின்னரே சின்னமருதுவையும் கைது செய்தனர்.
           சிவகங்கை சீமை துரோகத்தால் வீழும் நிலை ஏற்பட்டது.இதற்க்கு முழு காரணம் புதுக்கோட்டை கள்ளன் தொண்டைமானே ஆவான்...
மருது சகோதரர்களை சிறையிட்டு பின் திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர்...
அந்த நாள் வீரம் விதைந்த தினமானது அன்று....
 ஆங்கிலேயருக்கு அடங்காத சீமை தொண்டைமான் என்ற துரோக வலையினால் மண்ணுக்குள் அடங்கிப்போனது...

சிவகங்கை சீமையையும்,மருது பாண்டியர்களை பிடித்ததில் ஆங்கிலேயர்களை விட புதுக்கோட்டை கள்ளன் தொண்டைமான் அடைந்த சந்தோஷமே அளவில்லாதவையாகும்...

ஒரு பக்கம் தொண்டைமானுக்கு அச்சம் இருந்து கொண்டே இருந்தது.காரணம் மருது பாண்டியர்களை பிடித்துவிட்டாச்சு.இனி இந்த கொத்தடிமையை மறந்துவிடுவார்களோ என்று...இதுபோல வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா?என்ற நிலைபாட்டிலே இருந்து வந்தார் புதுக்கோட்டை கள்ளன் தொண்டைமான்...

சிவகங்கை சீமையும்,மருது பாண்டியர்களை அழித்தவன் துரோகி புதுக்கோட்டை கள்ளன் தொண்டைமானே.....
சிவகங்கை சீமை என்ற பதிவின் மூலம் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டுள்ளோம்..மாவீரர்கள் மரணம் எவ்வாறு என்பதையும் கூறியுள்ளோம் சரிதானே...

நன்றி....

சிவகங்கை சீமை-4
மாவீரர் காத்தன் வலையர்

தொகுப்பு:
     ஏ.எஸ்.கலையரசன் சேர்வை
      பொன்னமராவதி

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network


April 25, 2020

சிவகங்கை சீமை பகுதி -02 வரலாறு

சிவகங்கை சீமை பகுதி -02 வரலாறு





புதுக்கோட்டை கள்ளர் தொண்டைமான்;
                     புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர் சமுகத்தை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் வாந்த ஜமின்களில் இவர்களும் ஒருவர் இவர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரே வார்த்தையில் சுயநலவாதிகள் எனதான் சொல்லவேண்டும்...காரணம் தமிழகத்தில் தலை சிறந்த மன்னர்களுக்கு இடையே ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டு கைகூலியாக கோலைதனமாக வாழ்ந்த பெருமை தொண்டைமான்களையே சாரும்...

ஆங்கிலேயர்களை முற்றிலும் வரவேற்றவர் புதுக்கோட்டை தொண்டைமான்.ஏகாதிபத்திய கொள்கைக்கு முதல் அடிமையாக இருந்த அரசாகும்.
ஆங்கிலேயரை ஒழித்து கட்ட பல ஜமின்கள் எதிர்த்து போராடினர்.அப்படி போராடிய மன்னவர்களுக்கு துணை நிற்க்காவிட்டாலும் துரோகம் செய்யாமல் இருப்பதுதான் தமிழர் நாகரிகம்...ஆனால் நடந்தது அதுவல்ல.தமிழ் மண்ணுக்காக போராடிய மன்னவர்களை ஒழித்துகட்ட பல வழிகளில் முற்பட்டவர் புதுக்கோட்டை தொண்டைமான்.

புதுக்கோட்டை தொண்டைமானின் முதல்படி வெற்றியாக  பாளையக்காரர் மாவீரர் வீர பாண்டிய கட்ட பொம்மன் புதுக்கோட்டை தொண்டைமானுக்கு உட்பட்ட திருக்களம்பூர் அருகே தலைமறைவாகி இருந்தார்..அதை அறிந்த தொண்டைமான் தன் கள்ளர் படையினரை வைத்து நூதனமாக பேசி ஆங்கிலேயர்களிடம் காட்டியும்,நம்பிக்கை என்ற பெயரில் பச்சை துரோகம் செய்தவர்தான் இந்த தொண்டைமான்....இதன் பரிசாக பத்தாயிரம் பணமும்,பட்டாடடை,வாள்,அரபிக் குதிரை போன்றவற்றை ஆங்கிலேயர் அரசிடம் பரிசாக 
பெற்றார் புதுக்கோட்டை தொண்டைமான்..........

சிவகங்கை சீமையை சிறைபிடிக்க துடித்த புதுக்கோட்டை தொண்டைமான்:
              ஆங்கிலேயருக்கு அடங்காத அடிமைபடாத வகையில் இருந்த சிவகங்கை சீமையை சிறைபிடித்து ஆங்கிலேயரிடம் நல்லபெயர் எடுக்க பெரும்பாடுபட்டு ஆங்கிலேயருடன் முழு உருதுணையாக நின்றார் புதுக்கோட்டை தொண்டைமான்....
         சிவகங்கை சீமையில் அரசியல் மாற்றங்களை தொண்டைமான் ஆலோசனையின் பெயரில் பல அடிமைகளை சேர்த்து புதிய ஜமீனாக நியமித்தனர்.மருது சகோதரர்ளை ஒழிப்பதே முதல் வேலையாக மாறியது ஆங்கிலேயருக்கும்,தொண்டைமானுக்கும்..சிவகங்கை ஆட்சி அடிமைகள் பக்கம் இருப்பினும் மக்கள் மருது பாண்டியர்கள் பக்கம் இருந்துள்ளர்.
            இதுமட்டுமின்ற பல ஜமின்களின் நட்பு வட்டாரம் மருதுபாண்டியர்களுக்கு உதவியாக இருந்துள்ளனர்.குறிப்பாக வாராப்பூர் பாளையக்காரர் பொம்ம நாயக்கர்,மேலூர் நாடு இது போல ஜமின்கள் ஆங்காங்கே ஆதரவு கிடைத்து வந்தது மருது பாண்டியர்களுக்கு....
இதை தடுக்க சதி திட்டம் செய்தார் புதுக்கோட்டை கள்ளர் தொண்டைமான்.
தொண்டைமான் ஆலோசனையின் பெயரில் பிரான்மலைக்கு உட்பட்ட பகுதியில் மேலூர் நாடு,பிரான்மலை நாடு,நத்தம் நாடு தலைவர் அழைத்து முறையிட்டனர் ஆங்கிலேயர்கள்.அவர்களின் திட்டவட்டமாக கூறியதாவது என்னவென்றால் சிவகங்கை சீமைக்கோ அல்லது மருது பாண்டியர்களுக்கோ ஆயுதம்,உணவு,வெடி மருந்து இது போல எதும் குடுத்து உதவக்கூடாது.மேலும் நீங்கள்ஆங்கிலேயர்களுக்கு கீழ் இருக்கும் பகுதியாகவும் அமையவேண்டும் என்று கூறியுளள்ளனர்....
இது ஒருபுறம் நடக்க துரோகத்தின் உயிர் நாடியாக விளங்கிய கள்ளர் தொண்டைமான் பலவகையில் சதி வேலை செய்து கொண்டே இருந்தார்.
திருமயம் கோட்டையை ஆங்கிலேயருக்கு தாரவார்த்தார் கள்ளர் தொண்டைமான்.சிவகங்கையை தாக்க  ஆங்கிலேயரை தங்கவைக்கவும்,சிவகங்கை சீமை போராளிகளை சிறையிடவும் திருமயம் கோட்டையை பயன்படுத்தும்மாரு தொண்டைமான் ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதினார்.
சிவகங்கை சீமையை அழிக்க படைவீரர்கள்,வெடி மருந்து,உணவு,பாரங்கி என எல்லாவிதமான உதவிகளையும் செய்து கொடுத்தார் கள்ளர் தொண்டைமான்...
       கள்ளர் தொண்டைமான் சிவகங்கை சீமைக்கும் மருது பாண்டியர்களுக்கும் செய்ந்த துரோகம் கணக்கிட முடியாத அளவில் உள்ளது.......

ஆங்கிலேயரின் கைகூலியாகவும்,கொத்தடிமையாகவும், திகழ்ந்தார் தொண்டைமான் கள்ளன்....
   
தொடரும்
சிவகங்கை சீமை பகுதி-3

தொகுப்பு
       ஏ.எஸ்.கலையரசன் சேர்வை
        பொன்னமராவதி

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network


April 25, 2020

சிவகங்கை சீமை பகுதி-01 வரலாறு

சிவகங்கை சீமை பகுதி-01


சிவகங்கை சீமையானது இராமநாதபுரம் சீமைக்கு உட்பட்டு பின் “சிவகங்கை சீமை”யாக உருவானதாகும்.
சிவகங்கை சீமையை
பல ஜமின்கள் ஆண்டுவந்தனர்...
வேலுநாச்சியாரின் நம்பிக்கை பெற்றவர்களாக மாவீரர் மருது சகோதரர்கள் இருந்துவந்தனர்...
ராணி வேலுநாச்சியாரின்  மறைவுக்கு பிறகு சிவகங்கை சீமை மக்களின் மனதை வெற்றவர்களாகவும்,மக்களுக்கு போராடியவர்களாகவும் மருது பாண்டியர்களே விளங்கினர்...

        சிவகங்கை சீமையானது மையமாகவும் அதை சுற்றி இராமநாதபுரம் சீமை,புதுக்கோட்டை சீமை,நெல்லை சீமை,திண்டுக்கல் சீமை,மதுரை சீமை என்ற முறையில் சிவகங்கை சீமை அமைந்திருந்தது.
              சிவகங்கை  சீமையில் அரசு பரம்பரையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவந்தது.
  சிவகங்கை சீமையில் போர் படை மிக வழுவானதாக கொண்டவையாகும்.
இதில் வேலுநாச்சியாரின் நம்பிக்கை பெற்ற வீரர்களாக மருது பாண்டியர்களும்,துப்பாக்கி கவுண்டர்(காத்தான் வலையர்),மற்றும் இருளப்பதேவன்,முத்துராக்கு,சின்னவேடன் என பலரும் இருந்துவந்தனர்.அதைபோல நாட்டுக்காகவும்,நாட்டுமக்களுக்காகவும்  வீரமாக வாழ்ந்தவர்கள் ஆவார்கள்...
  போர்படை வீரர்களும்,மக்களும் வீரமிக்கவர்களாகவே திகழ்ந்திருந்தனர்.
         இதில் துப்பாகி படை,வாள் வீச்சுபடை,குத்துஈட்டி படை என பலவகையாக போர் திறன் பெற்றவர்களாக வீரர்களை போர்படையில் வைத்திருந்தனர்.
                     போர் ஆயுதங்களாக:மஸ்கட்,
மாட்ச்லார்,துப்பாக்கி,சருகார்,ஜிஸ்சாலி,ஈட்டி,வேல்,வாள்,குத்துவாள்,ஸரோசர்,துப்பாகிச்சினியன் இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பின் ஆங்கிலேயர்களால் கையக்கப்படுத்தப்பட்டு அவ்வாயுதங்களை  அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்...

               ஆங்கிலேயர்கள் சிவகங்கை சீமையை குறி வைத்தனர். ஆங்கிலேயர்களை கண்டவுடன் தம் நாட்டை ஒப்படைத்த பல ஜமீன்கள் இருப்பின்,சிவகங்கை சீமையிலே எதிர்ப்புதான் நீடித்துவந்தது.சிவகங்கை சீமையின் முழுமையான எதிர்பாகவே இருந்தனர்.சிவகங்கை மக்களை பொருத்தமட்டில் வாழ்ந்தால் வீர மைந்தனாக வாழவேண்டும்,வீழ்ந்தாலும் வீரனாக வீழவேண்டும் என்ற நிலைபாட்டிலேயே இருந்துவந்தனர்.
  
                என்னதான் நாட்டு பற்று இருந்தாலும்,அதில் சில குள்ள நரிகள் இருக்கதானே செய்யும்..ஆம் வீரம் நிரைந்த சிவகங்கை சீமையிலும் சுயநலம் பிடித்த,சுயநலவாதிகளும் இருந்தனர்....
            அது ஒரு புறம் இருக்க சிவகங்கை சீமையை ஒட்டியுள்ள பெரும்சீமையான  புதுக்கோட்டை சீமை விளங்கியது..அப்போதைய புதுக்கோட்டை ஜமினாக புதுக்கோட்டை  தொண்டைமான் கள்ளர்களே இருந்துவந்தனர்.

             ஆங்கிலேயரின் ஒப்பற்ற நண்பனாக விளங்கியவர் புதுக்கோட்டை கள்ளர் தொண்டைமான்...
தொண்டைமான் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ““துரோகி”” என்ற பட்டத்தின் முழு பொருளாகவே விளங்கினர்...
        ஆங்கிலேயர்களை பல ஜமீன்கள் எதிர்த்தாலும் தொண்டைமான்,எட்டப்பன் இது போல பல துரோகிகள் அடிமைகளாகவே இருந்து வந்தனர் என்று குறிப்பிடதக்க ஒன்றாகவே உள்ளது....

தொடரும்.....

சிவகங்கை சீமை பாகம்-2 
(சிவகங்கை சீமைக்கு நேர்ந்த துரோகம்)பற்றி

தொகுப்பு;
            ஏ.எஸ்.கலையரசன் சேர்வை
            பொன்னமராவதி

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network

Wednesday 13 November 2019

November 13, 2019

முத்தரையர் குடைவரை கோவில்கள்

முத்தரையர் குடைவரை திருமயம் கோவில்













  

     ""திருமெய்யம் குடைவரை""
திருமயம்:
            திருமயம் இயற்கையின் அடையாளத்தை கொண்ட ஒரு அழகிய நகரம்.புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டியிலிருந்து 20கிலோமீட்டர் தொலைவில் மதுரை செல்லும் வழியில் அமைந்துள்ளது.திருமயம் என்றாலே முதலில் நாபகம் வருவது கோட்டையும்,சிவபெருமாள்,
விஷ்னு பெருமாள் குடைவரை கோவில்கள்தான்...சைவ,வைணவ திருகோயில் ஒரே இடத்தில் குடிகொண்ட அற்புதக்காட்யிடமாக விளங்குகிறது...மக்கள் அதிகம் வாழும் ஊராகும்.இங்கு முத்தரையர்,செட்டியார்,மறவர்,பள்ளர் இதற பல இனமக்கள் வாழுகின்றனர்.திருமயத்தை ஆரம்ப காலத்தில் "திருமெய்யம்" என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி "திருமயம்" என்றாயிற்று...திருமெய்யத்தை முத்தரையர்,பாண்டியர்,நாயக்கர்,சேதுபதி,தொண்டைமான் உள்ளிட்ட பட மன்னர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர்...
              கற்பாரை மலைகளாக கிடந்தவற்றை 
கலை நயத்துடன்  குடைவித்து ஆலயமாகவும்,கோட்டையாகவும்,
நகரமாகவும் முதலில் உருவாக்கிய பெருமைக்குறியர் முத்தரையர் மன்னவர்களே...

திருமெய்யம் முத்தரையர் அரசர்; 
                  தமிழகத்தில் முத்தரையர் மன்னர்கள் கி.பி ஆறு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டு காலகட்டங்களில் நேரடி ஆட்சியில் இருந்த காலம்.
         அக்காலகட்டங்களில் வல்லம்,செந்தலை பகுதிகளை மையமாக கொண்டு ஆட்சி புரிந்து கொண்டே தென் பகுதிகளை கவணிக்க திருமெய்யம் என்ற நகரை  உருவாக்கி முத்தரையர் மன்னர்கள் ஆட்சி நடத்தினர்.அதில் சாத்தன் என்ற பெயர் கொண்ட மன்னவர்களே இப்பகுதிகளை அதிகமாக ஆட்சி செய்தற்க்கான கல்வெட்டுகளும்,சான்றுகளும் ஏராலமாக கூறுகிறது.
        இதில் திருமெய்யத்தை முத்தரையர்
மன்னரே முதலில் திருமயத்தில் கோவில் எடுப்பித்துள்ளார்.பின்னாலில் அக்கோவிலை சீர்செய்து குடைவரை கோவிலுக்கு கொடைகளை முத்தரையர் குல அரசி பெரும்பிடுகு பெருந்தேவி வழங்கியுள்ளார்...இச்செய்தி திருமெய்யம் குடைவரையில் உள்ள கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது...

அக்கல்வெட்டு,
                ஸ்ரீ விடேல் விடுகு 
                     விழுப் பேரதி அ
                     ரைசனாயின சாத்
                     தன் மாறன் றாய்
                    பெரும்பிடுகு பெ
                    ருந்தேவி புதுக்கு
                    இதற்க்கு ண்ணாழி
                    புறமாக அண்
                    டகுடி குடுத்து காரா
                   ண்மை மீயாட்சி உள்
                    ளடங்க...
விடேல் விடுகு விழுப்பேரதி முத்தரையர் என்ற சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகு பெருந்தேவியார் கோவிலை புதுப்பித்து, எந்தநாளும் வழிபாடு நடைபெற வேண்டும் என்பற்க்காக அண்டகுடி என்ற ஊரையும் தானாமளித்தார் அரசி பெரும்பிடுகு பெருந்தேவி என இக்கல்வெட்டு கூறுகிறது.
இதுமட்டுமல்லாது இவ்வரசி பல ஊர்களை தானம் கொடுத்துள்ளார்.அவ்வூர்களை அரசி பெயரிலே பெருந்தேவி மங்கலம்,தேவி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

சாத்தன் மாறனின் தந்தை அல்லது அவரது முன்னோர் எடுப்பித்த குடைவரை கோவிலை பின்நாளில் அதன் வம்சவழிந்தவர் சாத்தன் மாறனின் தாய் பெரும்பிடுகு பெருந்தேவியார் புதுப்பித்துள்ளார்...
முத்தரையர் அமைத்த குடைவரையிலே இதுதான் பழமையானவை என பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருமெய்யத்திலும் மேற்கூறியுள்ளே கல்வெட்டே பழமையாவையாகும்.(திருமெய்யம் ஆண்ட முத்தரையர்கள் பற்றிய வரலாறு ஆய்வு மூலம் தனி தொகுப்பு  பதிவிறக்கம் செய்யப்படும்)

திருமெய்யம் திருமால் சத்தியமூர்த்தி:
                 திருமெய்யத்து திருமாள் தற்போது சத்தியமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. திருமயத்தில் குடிகொண்டிருக்கும் சத்தியமூர்த்தி வைணவ சமயப் பிரிவினரின் முக்கியானதொரு கோவிலாகும்.
இக்கோவில் ஆதிரங்கம் என வழங்கப்படுகிறது.ஸ்ரீ ரங்கம் வைணவ கோயிலைவிட காலத்தில் பழமையானது. தென்பாண்டி மண்டலத்து 18பதிகளுல் ஒன்றாகும்.
குகைக்கோயிலிலுல் விஷ்னு பெருமாள் அனந்தயன மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.புதுக்கோட்டை மாவட்டத்திலே குடைவரையில் பெரிய அளவில் ஆதிசேஷன் என்ற சத்தியமூர்த்தி மலையோடு சேர்ந்து பாறையிலே வடிவமைக்கப்பட்டுள்ளார்...
ஆதிசேஷன் ஐந்து தலை அவதாரமாக உள்ளார்..அனந்தசமய மூர்த்தி பின்னால் உள்ள சுவற்றில் ஒரு கதையே கல்லிலே உருவாக்கப்பட்டுள்ளது.சுவற்றில் பல சிற்பங்களை பொறித்துள்ளனர்.
இடமிருந்து வலமாக கருடன்,சித்திரகுப்தன், மார்க்கண்டேயன்,பிரம்மா (விஷ் நாபிவிருந்து) தேவர்கள்,ரிஷிகள், கின்னராகள் உருவங்களும். இரண்டு அசுரர்கள் கொடுரமான பார்வையுடனும் சித்தகரிக்கப்பட்டுள்ளது.
விஷ்னு காலடியில் பூதேவி வடிவகைப்பட்டுள்ளது.
பெருமாள் மார்பில் ஸ்ரீதேவி அவரது இடகையில் அணைக்க,வலது ஆதிசேஷனைதட்டி கொடுக்கும் பாவனையில் உள்ளது.
              
திருமெய்யம் சத்தியகிரீஸ்வரம்:
                  திருமெயத்தில் சிவபெருமாளை இன்று சத்தியகிரீஸ்வரர் என்று இந்நாளில் அழைக்கப்படடுகிறது. திருமெய்யம் மகாதேவர் கோயில் திருமயம் குன்றின் தென்புறச் சுவரில் அமைந்துள்ள இரண்டு குடைவரைகளில் ஒன்றாகும். குடைவரைக்கு முன்பாக அம்மன் சன்னதியும் பிற தெய்வங்களுக்கு சிறு சன்னதிகளும் மண்டபங்களும்  பிற்காலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.  கிழக்குப் பார்த்த கருவறையும் தெற்கு பார்த்த அர்த்த மண்டபமும் கொண்ட குடைவரையின் கருவறையிலே லிங்கமுள்ளது. கருவறையின் இருபுறமுள்ள வாயிற்காவலர்களின்  சிற்பங்களும், கருவறையின் எதிர்ப்புறமுள்ள லிங்கோத்பவர் சிற்பமும் மிக அழகானவை.  தமிழகத்தின் பழமை வாய்ந்த லிங்கோத்பவர் சிற்பங்களில் இதுவும் ஒன்று. அர்த்த மண்டபத்தின் நடுவே கருவறையைப் பார்த்தவாறு நந்தி உள்ளது. குடைவரையின் வடசுவர் பாறையில் "பரிவாதினி" என்ற கிரந்தக் கல்வெட்டு செவ்வகக் கட்டம் கட்டி வெட்டப்பட்டுள்ளது.

திருமெய்யம் மேற்குடைவரை சிவபெருமாள்:
                   திருமெய்யம் சத்தியகிரீஸ்வர்,சத்தியமூர்த்தி குடைவரைக்கு  வடக்கு திசையில் தரையிலிருந்து மூன்று ஆள் உயரத்தில் அமைந்துள்ள முத்தரையர் எடுப்பித்த சிவபெருமாள் குடைவரை...
சீறான குடைவரை உள்ளே சிவலிங்கத்தை குடைவித்துள்ளர்.குடைவரையின் நுளைவு வாயிலானது செவ்வக வடிவில் வெட்டப்பட்டு அதன் வெளிப்புரம் பூ போன்ற தோரணங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமெயத்து தெற்க்கு குடைவரையில் பொறித்துள்ளது போலவே வடக்கு குடைவரையின் வெளிபக்கத்தில் "பரிவாதிரி" என்றும் யாழ் இசை கருவியினை கல்வெட்டினை பொறித்துள்ளனர்...ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடைவரை,கோவில் கட்டுவதில் முத்தரையர்கள் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்க்கு இக்குடைவரை ஒரு எடுத்துக்காட்டாகும்...

திருமாள் போற்றிய திருமங்கையாழ்வார்;
                     ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் தெண் நாட்டில் அமைந்துள்ளன.
திருமங்கையாழ்வார்  மங்களாசாசனம்  செய்த கோவிலில் திருமெய்யம் திருமாள் கோவிலும் ஒன்றாகும்.
மேல  
திருமங்கையாழ்வாரும் முத்துராச குலத்தவர் என்பது குறிப்பிடதக்கது...

தற்காலத்தில் முத்தரையர்கள் திருமயம் வட்டாரம்:
                    முத்தரையர்களுக்கும், திருமெய்யத்திற்க்கும் ஆயிரம் கால பந்தம் உள்ளது.அதற்க்கு எடுத்துக்காட்டாக சைவ,வைணவ திருமெய்யர்களும்,தற்காலத்தில் திருமயம் முழுவதும்,திருமயம் சுற்றுவட்டாரம் கிராமங்கள் முழுவதும் அடத்தியாகவும் பரவலாகவும் முத்தரையர் சமுக மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.திருமயம் சுற்றுபகுதிகளில் வாழும் முத்தரையர்கள் பெரும் நிலமுடயவர்களாக உள்ளனர்.இன்றளவும் விவசாயம்,வேட்டை,ஜல்லிகட்டு,மாட்டு வண்டி,கபாடி போன்ற தமிழ் வீரம் கலந்தவைகளோடு வாழ்ந்துவருகின்றனர்.
இப்பகுதி முத்தரையர்கள் திருமணம், தொழில்,குழந்தை பிறப்பு,போன்ற அனைத்து நற்காரிங்களையும் திருமெய்யர்களை முதன்மைபடுத்தியே இதற தெய்வங்களை வழிபாடு செய்கின்றனர்.மேலும்  கிராம நாடு பிரிவாக கானாடு கோனாடு 108 கிராம முத்தரையர்கள் என வாழ்ந்துவருகிறனர். தற்சயமம் 125க்கு மேற் கிராமங்கள் உள்ளதாக ஆய்வில் தெரிகிறது.
இப்பகுதி முத்தரையர்கள்,முத்துராச, வலையர்,காவல்காரர்,அம்பலம்,அம்பலகாரர் போன்ற பட்டங்களையும் சாத்தன்,மெய்யன்,அடைக்கன்,நாச்சி,தேவி,பிடாரி போன்ற பெயர்களையும் அதிகமாக கொண்டுள்ளனர்.திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் நடைபெரும் வைகுண்ட ஏகாதசி அன்று திருமயம் முத்தரையர்கள் ஒன்று கூடி
தண்ணீர்,அண்ணதானம்,மரகன்று போன்றவற்றை வழங்கி வெகுசிறப்பாக கொண்டாடுகின்றனர்.திருமயம் சுற்றபகுதி முத்தரையர் மக்கள் கோட்டை முனிஸ்வரர்,அடைக்கலம் காத்த அய்யனார்,கன்னிமார்கள்,கருப்பர்,
இளஞ்சாவூர் மாரியம்மன்,சங்கிலி கருப்பர்,காளியம்மமன் போன்ற பல கிராம தெயவங்களையும் வழிபட்டு வருகின்றனர்...

நன்றி..

வரலாற்று தொகுப்பு:
  ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்,
  சூர்யா,திருமயம் மதி(மு.வ.ஆ உதவி)
  முத்தரையர் வரலாறு ஆய்வுகூடம்