Wednesday, 9 October 2024
Wednesday, 17 May 2023
Anaiyur Mutharaiyar (Silai )Statue Png Images Free Downloa
Thursday, 14 April 2022
Anaiyur Mutharaiyar Statue Png Images Free Download
Sunday, 10 April 2022
Saturday, 29 January 2022
சாத்தன் பூதி(இளங்கோவதிஅரையர்) (எ) விஜயாலய சோழன்
*சாத்தன் பூதி(இளங்கோவதிஅரையர்) (எ) விஜயாலய சோழன்*
இவர் குவாவன் சாத்தன் முத்தரையர் அவர்களின் மூத்த மகன் ஆவார்
இவர் ஆட்சி ஆண்டு கிபி 850-871
இவர் தன் தம்பி சாத்தன் பழியிலி முத்தரையரிடம் இருந்து நாட்டை பெற்று *ரே நாட்டு சோழ அரசு மரபை தவிர்த்து* *முத்தரையர் என்ற அரச முறையை தவிர்த்து சோழன் என்ற பட்டத்தோடு அரசாட்சி புரிந்தார்*
இவர் அரசாட்சி புரிந்த காலகட்டத்தில் வேளீர் மன்னர்கள் பூதி என்ற பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் பதிவு செய்தனர் அதாவது *பூதி விக்கிரம கேசரி வேளீர்* என்று(விஜயாலய சோழனுக்கு) கட்டுபட்ட சிற்றரசர்களாக மாறின அதேபோல் ஆதித்தன் சோழன் ஆட்சி ஆண்டில் *பூதி ஆதித்தன்* என்று பெயரையும் பயன்படுத்தின
*விஜயாலய சோழன் ஆட்சி ஆண்டும் சாத்தன் பூதி ஆட்சி ஆண்டும் ஒரு ஆண்டாகும் ஆதலால் சாத்தன் பூதி விஜயாலய சோழனாக இருக்க வேண்டும்*
*அதே போல் பாண்டிய அரசர்கள் சாத்தன் பூதிஸ்வரம் என்று அழைக்கப்பட்ட கோவில் பின்னாளில் விஜயாலய சோழிஸ்வரம்மாக மாற்றபட்டதற்கான காரணம் சாத்தன் பூதியே விஜயாலய சோழன் ஆவார்*
இவர் அமைத்த கோவில் உத்தமதானிஸ்வரம் விஜயசோழிஸ்வரம் கீழ்தானியம் மேல்தானியம் போன்ற சிவன் கோயில் அமைத்தவர் இவரே
முத்தரையர் வரலாறு தேடல் குழுமம்
சூரிய குல சத்திரிய சோழன்புண்ணிய குமார முத்துராஜா
*சோழன்புண்ணிய குமார முத்துராஜா*
மகேந்திர விக்ரம வர்ம சோழனின் இரண்டாவது மகன் ஆவார் இவர் ஆட்சி ஆண்டு 610-660 வரை ஆட்சி புரிந்தார்
இவர் தன் தந்தையை பற்றியும் தன் அண்ணன் குணமுதித்த சோழன் குவாவன் முத்தரையர் பற்றியும் நந்தி வர்ம சோழன் பரம்பரை பற்றியும் தெளிவாக வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்ட கல்வெட்டுகள் சாசனங்கள் (செப்பேடுகள்) மூலம் மட்டுமே சோழர்கள் பற்றிய வரலாறு நமக்கு கிடைத்துள்ளது
*இவர் வெளியிட்ட செப்பேடு தான் தெலுங்கு மொழியில் முதல் செப்பேடு ஆகும்*
இவர் தங்கள் முன்னோர்களை பற்றி தெளிவாக கூறியுள்ளார்
*தாங்கள் கரிகாலன் சோழன் வழியில் வந்தவர்கள் என்று*
இவர் ஆட்சி செய்த பகுதி தன் தாத்தா *தனஞ்சய முத்துராஜா* ஆட்சி செய்த ரே நாடு பகுதியே ஆகும்
இவரின் சிறப்பு பெயர்கள்:
போர்முகராமன், மார்தவசித்தன், மதனவிலாசன்
முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏🙏
சூரிய குல சத்திரிய சோழன் மகேந்திர விக்ரம வர்ம சோழன்
*மகேந்திர விக்ரம வர்ம சோழன்*
தனஞ்சய முத்துராஜாவின் மகன் மகேந்திர விக்ரம வர்ம சோழன் ஆட்சி ஆண்டு கிபி 575-610இவன் தன் தந்தை தேசத்தையும் சுந்தரநந்தன் வாரிசு இல்லாத காரணத்தால்(பெரியப்பா) தேசத்தையும் ஆண்டு வந்தார் பின்னாளில் சிம்ம விஷ்னு மகன் நல்லடி சோழனுக்கு மகன் இல்லாததால் அவருடைய தேசத்தையும் சேர்த்துமூன்று தேசங்களையும் ஆண்டு வந்த சோழன் மகேந்திர விக்ரம வர்ம சோழ மகாராஜாவாகவும்
சேர சோழ பாண்டியர்களின் அதிபதி (தலைவன்) ஆகவும் இருந்தது உள்ளார்
*சீட் புள்ளி சிர பள்ளி* (திருச்சிராப்பள்ளி) என்ற நகரத்தை உருவக்கி திருச்சி மலைக்கோட்டை கோவிலை குடைவித்தவன் இவனே அந்த கோவிலில் உள்ள கல்வெட்டில் (மகேந்திர விக்ரம வர்ம என்று தெளிவாக எழுதியுள்ளார் அதேபோல் தனது மூத்த மகன் குணமுதித்த சோழன் (குணபாரகன் எனவும் அறியப்படுகிறார்)
அவரின் சிறப்பு பெயர்கள்(முதித சிலாக்ஷரன் நவராமன் மகேந்திர விக்ரம வர்ம சோழன் விக்கிரம மகேந்திர வர்ம சோழன்)
#முத்தரையர்_வரலாறு_தேடல்_வாட்சாப்_குழுமம்🙏🙏
சூரிய குல சத்திரிய சோழன் தனஞ்சய முத்தரையர்
தனஞ்சய முத்துராஜா சோழன்
ஆட்சி ஆண்டு கிபி 530-575
களப்பிரர் ஆட்சியின் காலத்தில் முதல் சோழர் கல்வெட்டு முதல் தெலுங்கு மொழி செம்மொழி கல்வெட்டை வெளியிட்டவர்
இவர் ஆறாம் நூற்றாண்டில் கரிகால முத்துராஜா எனவும் அறியப்படுகிறார்
இவரே முத்தரையர், பிற்கால சோழர்களின் ஆரம்ப புள்ளி
ரே நாடு(அரையர் நாடு) ஆந்திர பகுதியில் தனது ஆட்சியை நடத்தினார்
இவர் நந்தி வர்ம சோழனின் மூன்றாவது மகன் ஆவார்
முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏🙏
சூரிய குல சத்திரிய சோழன் சுந்தரநந்தன் முத்தரையர்
சோழன் சுந்தரநந்தன் ஆட்சி ஆண்டு கிபி 530-575 இவர் நந்தி வர்ம சோழனின் இரண்டாவது மகன் ஆவார் இவர் ஆட்சி செய்த பகுதி தமிழ்நாட்டின் எல்லை பகுதியான தொண்டை மண்டலம் இவர் தனஞ்சய முத்துராஜா சோழனின் இரண்டாவது அண்ணன் ஆவார்
முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏🙏
சூரிய குல சத்திரிய சோழன் நந்தி வர்ம சோழன்
சூரிய குல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள்
சூரிய குல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள்
🙏சூரிய குல சத்திரிய சோழ #முத்தரையர் மன்னர்கள்
கிமு இரண்டாம் நூற்றாண்டு சோழன்
மனுநீதிச் சோழன் (எல்லாளன்) மாட்டிற்க்கு நீதி கொடுத்த மன்னர் நீதி அரசன் தான் பெற்ற மகனையே தேரில் ஏற்றி கொண்று மாட்டிற்க்கு நீதி வழங்கிய சோழன் #மனுநீதிச் சோழன் 🙏🙏
முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏
சூரிய குல சத்திரிய சோழ வழியோன் முத்தரையர் வரலாறு
சூரிய குல சத்திரிய சோழ வழியோன் முத்தரையர் வரலாறு
#சோழ_முத்தரையர் வரலாற்றின் தொடக்கபுள்ளி💛❤️
சூரியகுல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள்
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்க்கு முற்பட்ட சோழ மன்னர் #சிபி_சோழன் பருந்திற்க்கு பயந்து தன்னிடம் தஞ்சம் புகுந்த புறாக்களின் பசியை போக்க தனது தொடையை அறுத்து புறாக்களின் எடைக்கு சமமாக உனவளித்த வள்ளல் #சிபி_சோழ_முத்தரையர் 💛❤️
முத்தரையர் வரலாறு தேடல்
சோழ தேசத்துப் பூர்விக மன்னர்கள்
சோழ தேசத்துப் பூர்விக மன்னர்கள்
முத்தரையர் சமூக குடிப்பெயர்கள்
முத்தரையர் சமூக குடிப்பெயர்கள்
முத்தரையர் சமுக குடிப்பெயர்கள் பதிவு-1
அடைக்கலம்,அடைக்கப்பன்,அடைக்கன்
தமிழ் பெயர்களில் முக்கியமான ஒரு பெயராக இந்த அடைக்கன், அடைக்கப்பன், அடைக்கலம் என்ற பெயர்கள் உள்ளது. இந்த பெயர் எதனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என நாம் பார்கவேண்டும்.
அதிலும் இந்த பெயரை 100க்கு 99% பெயர் கொண்ட சமுகம் முத்தரையர் சமுகமே.
பொருள்:
அடைக்கலம்,அடைக்கப்பன்,
அடைக்கன் என்ற பெயர்களில் அடை என்ற சொல் அடிப்படையாக கொண்டுள்ளது.அடை என்பது சேர்தல்,தஞ்சமைடைதல் என குறிக்கிறது.மேலும் அடை என்ற ஒரு வகை உணவும் உள்ளது.பெயர்களில் அடை வருவது பெரும்பாலும் அடைக்கலம் என்ற பெயரை மையமாக கொண்டே அடைக்கன்,அடைக்கப்பன் என்ற பெயர்கள் உள்ளது.
அடைகலம் என்பது ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்,யாரிடம் சென்றால் பாதுகாப்பாக இருப்போம் என்று அவர்களை சேர்வது,பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து ஆதரவு கொடுப்பதே அடைக்கலம்.
சிவன் அடைக்கலம்:
உலகாலும் எம்பெருமான் சிவபெருமானை போற்றும் விதகமாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அடைக்கலப்பத்து என்று பத்து பாடல்களாக பாடியுள்ளார். பரம்பொருளை நாடி வருவோரை தம்மில் அடைக்கலம் கொடுத்து காப்பவராக கூறியுள்ளார்.
ஒரு பாடல்:
(எ.கா)
பெரும் பெருமான் என் பிறவியை
வேர் அறுத்துப் பெரும் பிச்சித்
தரும் பெருமான் சதுரப் பெருமான்
என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான் மலரோன்
நெடுமால் அறியாமல் நின்ற
அரும் பெருமான் உடையாய்
அடியேன் உன் அடைக்கலமே.
நீ பிறவியைப் போக்குபவன்,
பக்திப் பித்தைப் பெருக்கு பவன்,
எதையும் சாதிப்பவன்,சித்தமிசை குடிகொள்பவன்,ஜுவபோதம் படைத்த அயனுக்கும் அரிக்கும் எட்டாதவன்,ஜீவர்களை உடையவன்,ஆதலால் நீமதாதேவன்,
உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்.
இவ்வாறு அடைக்கலம் என்ற சொல் சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது. திக்கிட்டவனுக்கு தெய்வமே துணை என்பதற்கேற்ப பரம்பொருளான சிவபெருமானை நாடி செல்வோரை எவ்வாறு அடைக்கலம் கொடுத்து காக்கின்றாறோ அதை போல முத்தரையர் சமூக மக்கள் தங்களை நம்பி வருபவர்களை அடைக்கலம் கொடுத்து காப்பவர்களே. ஆகையால், அடைக்கலம் என்ற பெயரை முத்தரையர் சமூகம் மிகுதியாக கொண்டுள்ளது.
மேலும் முத்தரையர் சமூக குல தெய்வ வழிபாட்டில் சுவாமி அடைக்கலம் காத்த அய்யனார் சாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், முக்கிய வழிபாட்டு தெய்வமாகவும் கருதப்படுகிறது.
இதை மையமாக கொண்டே முத்தரையர் சமுகத்தில் அடைக்கலம்,அடைக்கன்,அடைக்கப்பன் என்ற பெயர் நிலைபெற்றுள்ளது.
இதே போல பெண்கள் பெயராக அடைக்கி,அடைக்கம்மாள் போன்ற பெயர்கள் உள்ளது.
குறிப்பாக: பொன்னமராவதி,தில்லைக்காடு,நத்தம்,
திருமயம் போன்ற பகுதிகள் சுவாமி அடைக்கலம் காத்த அயயனார் கோவில் அமைந்துள்ளது.
#அடைக்கன் #அடைக்கலம் #அடைக்கப்பன்
இங்ஙனம்
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்
தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்
தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி ஒன்றியம்,வலையப்பட்டி அருகே உள்ள மணப்பட்டி என்ற ஊரை காணியாட்சியாக கொடுத்த பட்டயம்.
கி.பி 18ம் நூற்றாண்டு காலத்தில் கானாட்டார்,கோனாட்டார் எல்லை சண்டையில் 22பேர் தலைப்பலி கொடுத்தனர்.அவ்வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி நல்லமெய்யான்,நாட்டாபிள்ளை உள்ளீட்டாருக்கு "நாட்டான் முத்திரியன் வில்லூனி நத்தம் மணமங்கலம் நல்லூரை"
பிடார முத்திரியர்,சக்கர முத்திரியன்,
செம்ம முத்திரியர்,
காடமுத்திரியன்,குப்பிடார முத்திரியன் இவர்கள் இவ்வூரை காணியாட்சியாக கொடுத்துள்ளனர்.மேலும் இன்றவும் சுவாமி வலையப்பட்டி அடைக்கலம் காத்த ஐய்யனார் கோவில் வழிபாடு மற்றும் வலையப்பட்டி நாட்டார்களில் உள்ள கிராம நாட்டில் இன்றளவும் நாட்டாப்பிள்ளையாக உள்ளனர்.
நன்றி.
இங்ஙனம்
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
வலையர்தடி வளரி ஆவணம்
வலையர்தடி வளரி ஆவணம்
கண்ணப்ப நாயனார் திருமேனி
கண்ணப்ப நாயனார் திருமேனி
கண்ணப்ப நாயனார் திருமேனி!
சிற்பத்தின் பெயர் - கண்ணப்ப நாயனார்
சிற்பத்தின் அமைவிடம் - செப்புத்
திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் - எழும்பூர்
வட்டம் - அமைந்தகரை
மாவட்டம் - சென்னை
அமைவிடத்தின் பெயர் - அரசு மைய
அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை - சைவம்
அளவுகள் / எடை - உயரம் 66 செ.மீ.
விளக்கம் -
கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்காக தன் இடது கண்ணை தோண்டிய பின்பு, கையில் உள்ள கருவியால் வலது கண்ணையும் தோண்டுதல் பொருட்டு நிற்கும் காட்சி. அன்பினுக்கோர் வடிவம் தந்தாற் போன்று அடியோன் கண்ணப்பர் மரவுரியாடை தரித்தவராக, மார்பில் குறுக்காக சன்னவீரம் செல்கிறது. செவிகளில் வளையங்களும், கைகளில் வளைகளும், கால்களில் பாதணிகளும் அணிந்தபடி, தலையணி சடைமகுடமாய் திகழ, தலையை இடப்பக்கம் சாய்த்தவாறு நிற்கிறார்.
ஆக்கப் பொருள் - உலோகம்
காலம் / ஆட்சியாளர் - கி.பி.975 / முற்காலச் சோழர்
ஒளிப்படம் எடுத்தவர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
சுருக்கம் -
63 நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்ப நாயனார் வேடுவர் ஆவார். சிவபெருமானுக்காக தன் கண்களை தந்தவர்.
நன்றி தகவலாற்றுப்படை.
இவண்
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
வேட்டுவரும் வலையரும்
வேட்டுவரும் வலையரும்
Tuesday, 30 November 2021
வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் " காலத்து சேலம் அருங்காட்சியக வீரக்கல்
"வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் " காலத்து சேலம் அருங்காட்சியக வீரக்கல்
இரண்டாம் பராந்தகர் தம் மக்களில் மூத்தவனான "இரண்டாம் ஆதித்யனுக்கு" இளவரசு பட்டம் கட்டினார்.
ஆற்றலும் வலிமையும் கொண்ட மாவீரனாய் திகழ்ந்த ஆதித்ய கரிகாலன் முன்பு தம் தந்தையால் சுரம் இறக்கப்பட்ட வீரபாண்டியனை சேவூர் என்னுமிடத்தில் எதிர்கொண்டான் !
இந்த வீரபாண்டியன் சோழர்க்கு அடிபணியாமல் சுதந்திர ஆட்சி செய்து வந்தான், ஏதேனும் ஒரு சோழனை கொன்றமையால் தம்மை "சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்" என்று அழைத்துக் கொண்டான்.
ஆதித்யன் இவனை சேவூரில் கொன்று பாண்டிய நாட்டை சோழர் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்து தாம் பூண்ட பெயரே, மறந்தாலும் மறையாத பட்டமான " வீரபாண்டியன் தலை கொண்ட கொபரகேசரி".
வடக்கே காஞ்சியில் தங்கியிருந்து சோழரின் வடவெல்லையை விரிவுறச் செய்தான், ஆதித்யன் சூழ்ச்சியால் இளவயதிலேயே கொல்லப்பட்டான், அதில் இன்றும் மர்மம் நிலவுகிறது.
இவனின் கல்வெட்டுகள் அதே கம்பீரமான பட்டபெயருடன் காணக்கிடைகின்றன, அவற்றுள் சேலம் அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் காணக்கிடைக்கும் கல்வெட்டு மேற்கு தமிழகத்தில் கிடைக்கும் முக்கிய கல்வெட்டு ! அதேபோல் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியில் கிடைத்த வீரக்கல்லில் ஆதித்த கரிகாலன் குறிப்பு கிடைக்கிறது ! அந்தக் கல் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது !
கொடுக்கமங்கலத்தின் ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்க முத்தரையன் என்பான் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்க அவர்களோடு சண்டையிட்டு வீரமரணம் எய்துகிறான் ! அவனுக்காக ஆயிரவன் ஏகவீர முத்தரையன் என்பவர் எடுத்த வீரக்கல் !
வீரபாண்
டி கனை எறிஞ்
சு தலை கொ
ண்ட கலி(ரி)
கால சோழ
ற்குச் செல்லா
நின்ற யா
ண்டு நாலா
வது கொ
டுக்க
மங்
கல
த்தி
லிருக்கும் ஆரைய
ன் ஆயிர
வனான
இளஞ்
சி
ங்க மு
ததரை
யன்த
ன்னு
ர்க்காலி
இது வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழனின் நாலாவது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது
இந்த மன்னன் சுந்தர சோழரின் மூத்த மகனான இரண்டாம் ஆதித்தன் எனும் ஆதித்த கரிகாலன் ! முதலாம் இராஜராஜனின் அண்ணண்
பொதுவாக வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி அல்லது பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்று காணப்படும் ஆதித்தன் கல்வெட்டு இங்கு வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு
தானமநாடு சேந்தன்குடி ஜமீன் வழுவாடிதேவர்
தானமநாடு
ஜமீன் வழுவாடிதேவர்












